Friday, November 20, 2020

என்னுலக அரசி!

விண்ணவர்க்கும் வழிகாட்டும் காரிருள் காந்தன்

கண்ணனின் கீதைபோல் கருத்தொன்று சொல்வேன்கேள் 

மண்ணுலகு முழுதும் போற்றிடும் அரி-அரனும் 

பெண்ணுலக தெய்வத்தின் அருகினில் குறைவாம் - அவள் 

எண்ணங்கள் யாவிலும் பாசமும் ஆசியும் 

கொண்டவள் நமையீன்று வளர்த்து வழிகாட்டி

வண்ணமய வாழ்க்கையைத் தந்தென்றும் இன்புறும்

என்னுலக அரசியாம் அன்னையே நீவாழியவே!